திட்டமிடப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான பியூமா எனப்படும் பியும் ஹஸ்திக எதிர்வரும் 18ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பியூமா எனப்படும் பியும் ஹஸ்திக கடந்த பெப்ரவரி மாதம் டுபாயில் கைதானார்.
இதனையடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று டுபாய்க்கு சென்று விமானம் மூலம் அவரை நாட்டுக்கு அழைத்துவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.