ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 38 வேட்பாளர்களில் 15 பேர் மாத்திரமே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தியுள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அத்துடன் மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் முன்னெடுத்த ஆய்வொன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக கூறியுள்ளார்.