பன்றி தாக்குதல் – பெண்ணொருவர் பலி!

0
5

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே உயிரிழந்ததாகக் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here