மணலை கொண்டு சென்ற டிப்பர் ரக வாகனமொன்றின் சாரதியிடம் 2,000 ரூபாய் கையூட்டல் பெற்றமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு 8 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிலியந்தலை காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்குக் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபருக்கு 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது