பங்களாதேஷில் மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதும் தனது தாயார் நாடு திரும்புவார் எனப் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் தெரிவித்துள்ளார்.
இதனை அவர் சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
எனினும், அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷில் நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.