இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதியிலுள்ள மண்டி – பதாரில் மேக வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பல்வேறு இயற்கை காரணிகளால், மேகம் ஒரே சமயத்தில் அதிகளவான நீரைக் கொட்டும் நிகழ்வு அவ்வப்போது இடம்பெறுவதுண்டு.
அவ்வாறு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், 9 பேர் மாயமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மேக வெடிப்பு காரணமாக பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.