கோர விபத்து – 18 பேர் பலி!

0
3

இந்தியாவின் உத்தரப்பிரதேசம், உன்னாவ் நகரில் இன்றைய தினம் (10) பேருந்தொன்று விபத்திற்குள்ளானதில்18 பேர் உயிரிழந்தனர். லக்னோ – ஆக்ரா நெடுஞ்சாலையில், பீகாரிலிருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தொன்று, பாரவூர்தி மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக உத்தரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவளை விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ள நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here