கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு நாளை (10) முதல் பதினொரு நாட்களுக்குக் கண்டி நகர எல்லையிலும் மற்றும் அதனைச் அண்மித்துள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெரஹரா வீதி பவனி வரும் பத்தாம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி பெரஹரா தினத்தன்று வரை மதுபானக்கடைகள் மூடப்படும் எனவும், மேலும் குறித்த அக்காலப்பகுதியில் நட்சத்திர உணவகம் மற்றும் உணவகங்களில் மதுபானம் விற்பனை செய்வதுடன் மதுபானம் அருந்த அனுமதி வழங்க முடியாது எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறைச்சி மற்றும் மீன் விற்பனைநிலையங்களை இந்தக் காலப்பகுதியில் மூடுமாறு கண்டி மாநகரச் சபை அறிவித்துள்ளது.