வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிபர் அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இந்த விசேட அரச மன்னிப்பின் பிரகாரம், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகளும், மஹர சிறைச்சாலையில் இருந்து 37 கைதிகளும் என மொத்தம் 278 கைதிகள் இன்று (23) விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதன்படி, பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.