வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு எச்சரிக்கை!

0
8

ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விடும் போது அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் என்ன வகையான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் பொறுப்பு உரிமையாளருக்கு இருக்க வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தைக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடம்பர வீடுகளில் தங்கியிருந்து நிகழ்நிலை (Online) சூதாட்டத்தில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here