இரண்டு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற டென்னிஸ் வீரர் அண்டி மரே, இம்முறை நடைபெறும் விம்பிள்டன் தொடரின் ஒற்றையர் போட்டிப்பிரிவில் இருந்து விலகியுள்ளார். எனினும் அவர் இரட்டையர் போட்டிகளில் தமது சகோதரர் ஜெமியுடன் இணைந்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டி மரேயின் இறுதி விம்பிள்டன் போட்டித் தொடர் இதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படும் நிலையில், அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.