ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுக்ரைனுக்கு எதிரான யுத்தத்தின் போது இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், மேலும் பலர் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ளார்.
இதன்போது நேற்றிரவு இடம்பெற்ற விருந்தின் பின்னர் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து அவரின் கோரிக்கைக்கு ரஷ்ய ஜனாதிபதியும் விருப்பம் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.