முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட உரையொன்று ஆற்றவுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவர் பகிரங்கமாக உரையாற்றுவது இது முதல் தடவையாகும்.
இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை குறித்து ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும், தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்தில் வருவதில்லை எனவும் முடிவு செய்துள்ளார்.
அவர், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் தலைவராக உள்ளார்.