ரணிலின் முதலாவது பொதுக் கூட்டம்!

0
4

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

ஐக்கியத் தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஆதரவு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலரும் இதில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் அநுராதபுர வரலாற்றுச் சிறப்புமிக்கப் புனித ஜயஶ்ரீ மகாபோதியில் வழிபாடு நடத்தி ஆசி பெற்றதுடன், மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here