அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் எஸ்.ஜே.பி அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
விசேட ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டிய அவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு தமது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர்.