சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அனர்த்தங்கள் காரணமாக தற்காலிக தங்குமிடமாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக இந்த இரண்டு மாகாணங்களில் சில பாடசாலைகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.