2013ஆம் ஆண்டுப் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோருக்கு இன்று (08) மரணத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஸ் குணவர்தன மற்றும் ஏனைய பிரதிவாதிகள் தம்மை அந்தத் தண்டனைகளிலிருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன் இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.