முடிவுக்கு வந்த கடவுச்சீட்டு வரிசை!

0
5

குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாகக் காணப்பட்ட கூட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளது.

எவ்வித நெரிசலும் இன்றி இன்று வெளிநாட்டுக் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகக் குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தைச் சுற்றி பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

திணைக்களத்திடம் உள்ள வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கடவுச்சீட்டு வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் நேற்று முன்தினம் ஒரு நாளைக்கு ஆயிரம் அனுமதி சீட்டு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதேபோல், அன்றைய தினம், பல நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வரியைில் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கவும் பொலிசார் ஏற்பாடு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here