முடிவுக்கு வந்தது 15 வருட காதல் வாழ்க்கை!

0
7

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

ஜெயம் ரவி, ஆர்த்தியைக் காதல் திருமணம் செய்து கொண்டதுடன், இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம்.

ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது.

என்னுடைய பயணத்தைத் திரைப்படங்கள் வாயிலாகவும் திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத்துறை நண்பர்கள், பத்திரிகை, ஊடகத் துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள் என் இரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.

எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தியுடனான எனது திருமண வாழ்விலிருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்.

இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல.

என்னைச் சார்ந்தவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும் படியும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய முன்னுரிமை எப்போதும் என் நடிப்பின் மூலம் எனது இரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன்.

நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன்.

எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here