மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய மகளிர் அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இதனை அறிவித்துள்ளது.
இதன்படி ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான குறித்த குழாமில் ஸ்மிருதி மந்தனா, செஃபாலி வர்மா, டீப்தி சர்மா, ஜெமீமா ரொட்ரிக்ஸ், ரிஷா கோஸ், யஷ்திக்கா பாட்யா, பூஜா வஸ்ட்ரகார், அருந்ததி ரெட்டி, ரேனுகாசிங் தாகூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரெயங்கா படில் மற்றும் சஜீவன் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
10 அணிகள் பங்கேற்கும் குறித்த தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.