போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

0
3

62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய ஹேனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

நேற்றிரவு (05) தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலுவன வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here