பொகவந்தலாவையில் பரபரப்பு!

0
6

குளவி கொட்டுக்கு இலக்கான 8 ஆண்கள் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

தோட்ட பணியில் ஈடுபட்டு இருந்த வேளையிலேயே இந்த எட்டு ஆண் தொழிலாளர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளதுடன் தற்போது வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here