நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக விசேட சோதனை நடத்தப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் இன்று முதல் (02) நடைமுறையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து ஆணைக்குழுவிற்குப் பயணிகள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அதன் திட்டமிடல் பணிப்பாளர் கே.எஸ்.சி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.