கொழும்பை சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவும் மூடப்படவுள்ளதாக எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடும் காற்றுடன் மரங்கள் முறிந்து விழுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறு வீதிகள் மூடப்படவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ, தெரிவித்தார். இதன்படி, பௌத்தாலோக மாவத்தை மலலசேகரச் சந்தியில் இருந்து தும்முல்லை சுற்றுவட்டம் வரையும், விஜேராம வீதி கிரிகோரி வீதி சந்தியிலிருந்து பௌத்தாலோக வீதி வரையும், பெரஹெர மாவத்தை ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தைச் சந்தியிலிருந்து ரொட்டுண்டா சந்தி வரையும், பிரே புரூக் பகுதியும் இவ்வாறு மூடப்படவுள்ளன.
தனது கணவரின் மது கோப்பையில் விஷ இரசாயனத்தை ஊற்றி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.