இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றை தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தொன்றின் நடத்துநர் மற்றும் ஊழியர்கள் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.