பங்களாதேஷ் ஒரு ரணிலைத் தேடுகிறது!

0
4

தற்போதைய பங்களாதேஷ் ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது என நீர்ப்பாசன, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு துணிச்சலான தலைவர் பிறந்ததன் காரணமாகவே இலங்கை இவ்வாறான ஆபத்தான நிலைமையை மரபுரிமையாகப் பெறவில்லை எனப் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“ஒட்டுமொத்த பங்களாதேஷுமே நெருப்புக் குவியல் ஆகிவிட்டது. இன்று பங்களாதேஷ் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவரைத் தேடிக்கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒரு தலைவர் இந்தத் தாய் மண்ணில் பிறந்ததால் நமக்கு அந்த நிலை ஏற்படவில்லை.

நாட்டின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறிய போது, ஒரு துளிகூட இரத்தம் சிந்தாமல் தாய்நாட்டின் அரசமைப்பை மீட்டெடுத்தவர் வேறுயாருமல்ல, எனவே நாம் இன்று சகல நிறங்களையும் கட்சிகளையும் புறந்தள்ளி எமது கடமையில் இணைந்து கொள்கின்றோம்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here