நோட்டன்பிரிட்ஜ் – பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!

0
5

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இம்மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் முதலில் ஒன்பது வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு சுமார் 10 வருடமாக அப்பகுதியை விட்டு தப்பி ஓடிய நிலையில், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து, சந்தேகநபரை ஐந்து மாதங்கள் விளக்கமறியலில் வைத்த பின் , கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜேரத்ன தெரிவித்தார்.

ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிணையில் கையெழுத்திட வந்த சந்தேகநபர், மீண்டும் சகோதரியின் வீட்டுக்குச் சென்று அவரது சகோதரியின் மகளையே பலாத்காரம் செய்துவிட்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற போது, சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீதித் தடைகளை பயன்படுத்தி சந்தேக நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பாடசாலை மாணவி டிக்கோயா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடைய நோட்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here