நாட்டை மீட்க எமது கட்சி தயார் – அநுர!

0
3

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்க தமது கட்சி தயாராகவிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று பத்தரமுல்லை – பெலவத்தையிலுள்ள கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இன்று ஏனைய தரப்பினர் பல்வேறுபட்ட பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகத் தங்களது தேர்தல் செயற்பாடுகளை வலுவான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

இந்தத் தேர்தலின் மூலம் நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்பதற்கான சவாலை ஏற்கத் தயார்.

அதேநேரம் வளமான நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here