பொலிஸ் நாய்கள் பிரிவிற்காக நெதர்லாந்தில் இருந்து 5 கோடி 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த நாய்களில் 13 பெல்ஜிய மாலினாய்ஸ் நாய்கள், 12 ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் மற்றும் 10 ஆங்கில ஸ்பானியல் நாய்கள் என்பன விலங்கு பண்ணையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த நாய்கள் நேற்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.