தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாலியாறு, பரங்கியாறு என்பவற்றின் நீர்மட்டமும் உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில், மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இரணைமடுக் குளத்தின் 8 வான்கதவுகள் தொடர்ச்சியாக திறந்துவிடப்பட்டுள்ளதாக வட மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் என்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.