தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படாது என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில் அரசியலமைப்பு ரீதியிலான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதியால் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாகவும் அதனால் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.