தரமற்ற சோப்புகளைப் பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்பச் சுகாதாரச் சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகச் சில பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தரமற்ற குழந்தை சோப்பை பயன்படுத்துவதாகவும், அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அதன் பொருளாளர் திருமதி பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார்.