வடக்கு, கிழக்கில் உள்ள சகலரும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அதற்குத் தமிழ் மக்களின் ஆதரவை கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் பேசும் மக்கள் அதே மொழியில் அரசுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்து அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விஷயங்களும் செய்து தரப்படும் என்றும் அனுர உறுதியளித்துள்ளார்.