ஜனாதிபதித் தேர்தல் வழக்கு!

0
4

ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தடை விதிக்கக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பில், 3 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உட்பட 3 தரப்பினரால் இந்த இடையீட்டு மனுக்கள் இன்று (05) தாக்கல் செய்யப்பட்டதாக எமது நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த உயர்நீதிமன்ற வியாக்கியானம் வெளியாகும் வரையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதிக்குமாறு வர்த்தகர் ஒருவரால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here