ஜனாதிபதிக்கு பசில் தொடர்ந்தும் ஆதரவு!

0
6

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை ஸ்திரமற்ற நிலையிலிருந்து விடுவிக்கும் திறன் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருப்பதால் தமது கட்சி தொடர்ந்தும் அவருக்கு ஆதரவு வழங்கும் எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here