இந்த மாத இறுதிக்குள் இலங்கையின் தேசிய கட்டமைப்பிற்குச் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி 1,000 மெகா வோட்டாக அதிகரிக்கும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரத் தெரிவித்துள்ளார்.
அதில் 944 மெகா வோட் மின்சாரம் கூரை மீது பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி கட்டமைப்பு ஊடாகப் பெறப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் கூரை மீது பொருத்தப்பட்ட சூரிய சக்தி மூலமான மின் கட்டமைப்பின் ஊடாக 1,000 மெகா வோட்டுக்கும் அதிகமான உற்பத்தியைப் பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.