4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை சீனா சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீனப் பிரதமர் லீ கியாங், மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகக் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் சீன அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரில் ராஜபக்சவின் விஜயம் அமைந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.