கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்!

0
3

மதுரங்குளிய நல்லந்தல்வ பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் இன்று (12) அவரது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மதுரங்குளிய நல்லந்தல்வ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய செல்வமரிக்கார் ஐனா உம்மா என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தனக்குச் சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும், பிள்ளைகள் எப்போதாவது தம்மைப் பார்க்க வருவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அப்பெண்ணின் உடலில் வெட்டுக்காயங்களோ அல்லது வேறு காயங்களோ காணப்படவில்லையெனத் தெரிவித்ததோடு குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here