குளவி கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்கள்!

0
4

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூதூர் 5 பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (25) மாலை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்ட போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலையை அண்மித்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளவி கூட்டில் இருந்த குளவிகளே இவ்வாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here