இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 1400 கோடி இந்திய ரூபா பணத்தினை முதலீடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கர்நாடகாவின் சிறு மற்றும் பாரிய கைத்தொழிற்துறை அமைச்சர் எம்.பி. பாடீல் இந்த விடயத்தை இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மென்பான உற்பத்தி நிறுவனமொன்றினை நிறுவும் நோக்கில் இவ்வாறு முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.