சிங்கப்பூரில் உள்ள செடோசா தீவின் கரையோரம் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுதான் இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதிகாரிகள் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், அந்தப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.