வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு கதிர்காமத்திற்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேடப் பூஜைகளுடன் இன்று (30) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் இன்று (30) காலை 6.00 மணியளவில் இந்தப் பாதை திறந்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கலந்து கொண்டார்.