ஒலிம்பிக் வீராங்கனை மீது தீ!

0
5

உகாண்டாவை சேர்ந்த ஒலிம்பிக் மரதன் ஓட்டப்பந்தய வீராங்கனையான ரெபேக்கா செப்டேகி மீது அவரது ஆண் நண்பர் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்போது படுகாயமடைந்த நிலையில் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெபேக்கா செப்டேகி பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்டு நாடு திரும்பிய நிலையில் கென்யாவின் டிரான்ஸ் நசோயா பகுதியிலுள்ள அவரது வீட்டில் ஓய்விலிருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது ஆண் நண்பருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்தபோது ரெபேக்கா மீது அவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here