எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க தயங்கும் – ராகுல்!

0
7

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கக் காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது. ஆனால் ராகுல்காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க தயக்கம் காட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here