எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கே ஜனாதிபதித் தேர்தல்!

0
4

எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதற்கு இணங்கியுள்ள 34 அரசியல் கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு பத்தரமுல்லையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த ஜனாதிபதி எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் தற்போது மீட்சிப் பெற்றுள்ளது.

சமுர்த்தி 3 மடங்காக அதிகரித்து அஸ்வெசும வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சகல மக்களையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் நாடொன்றே தற்போது அவசியமாகவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here