இலங்கை அணிசேரா நாடு என்ற கொள்கையை, தொடர்ந்தும் உறுதியாகக் கடைப்பிடிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மேற்கு, கிழக்கு என எந்தவொரு பக்கங்களையும் ஏற்காது. சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தோ பசிபிக் வலயத்தில் அதிகாரத்திற்காகப் போட்டியிடுகின்றன.
இதன்போது, நாட்டுக்கும் வலயத்திற்கும் ஏற்றவாறான சரியான முடிவை இலங்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.