இந்திய கிரிக்கட் அணியின் வீரர் விராட் கோலி, உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
விராட் கோலி நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் திறன் வெளிப்பாடு தொடர்பாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றன.
கடந்த 7 போட்டிகளில் அவர் வெறும் 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதுடன், இரண்டு தடவைகள் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
இந்தநிலையில் அவரை தொடரின் இறுதிப் போட்டியில் இணைக்க வேண்டுமா என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
எனினும், நேற்று இங்கிலாந்திற்கு எதிராக இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்திருந்த அணித் தலைவர் ரோஹித் ஷர்மா,
“கோலியின் நிகழ்கால விளையாட்டுத் திறன் தொடர்பாக எவ்வித அதிருப்தியும் இல்லை.
ஓட்டங்களைக் குவிப்பதைக் காட்டிலும் அதற்கான நோக்கமே முக்கியம்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு அணித் தலைவரின் ஆதரவு இருக்கின்ற நிலையில், விராட் கோலி தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதில் சிக்கல்கள் இருக்காது என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.