சர்வதேச இருதரப்பு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டமையை, இலங்கை வர்த்தகச் சம்மேளனம் வரவேற்றுள்ளது. இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதன் மூலம், நாட்டின் கடன் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.
மேலும் இது பொருளாதாரத்திற்கான நிதி அணுகலையும் இலகுப்படுத்தும் என்று, வர்த்தகச் சம்மேளனத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.