இரண்டே வாரங்களில் ஆசிரியர் நியமனம்!

0
7

தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், தொழிநுட்பம், கணிதம் போன்ற துறைகளில் 10,535 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தைக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை நிரப்பப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 8000 எனவும், மாகாண மட்டத்தில் 6000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here