இலங்கை அணி வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இலங்கை இரசிகர்கள் எப்போதும் தமது ஆதரவினை வழங்குவார்கள் எனத் தாம் நம்புவதாக இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தை வென்றதைத் முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் “நான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இலங்கை அணிக்காக ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணத்தை வென்று கொடுக்க வேண்டும் என்பது தனது மிகப்பெரிய கனவு. அதில் ஒன்றை நாட்டுக்காகப் பெற்றுக்கொடுக்க முடிந்தது. இது தான் ஆரம்பம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.